Friday 8 November 2013



சற்று முன் வரை 
உயிரோடிருந்த ஓர் அணில்..

ஒரு துணை தேடி 
துள்ளித் திரிந்திருக்கலாம்.

இரைதேடி 

பசியோடு அலைந்திருக்கலாம்..

வசிப்பிடம் ஒன்றின்
வழி தேடியிருக்கலாம்...

விசாரணைக்கு உட்படாதொரு
ஒருதலைபட்ச விபத்தின் 

காரணகர்த்தா நான்..!

குருதிபடிந்த முன்சக்கரம்
கழுவி முடிக்கையில்,
குருதியிழந்த அணில் நினைவும்
கழுவப்பட்டுவிட்டது..

பின்னொரு நாளில்,
பெருந்துயர் காலத்தில்,
பாவமென்ன செய்தோமென
பட்டியலெடுத்து நிரடுகையில்

நிச்சயம் இச்சம்பவம்
நினைவுக்கு வராமல் போகும்...!

No comments:

Post a Comment